மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழு சென்னை வருகை

தமிழகத்தில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு சென்னைக்கு வந்தது.

Update: 2021-11-21 14:00 GMT
தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய வந்த மத்திய குழு

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இந்தாண்டு வழக்கத்தை விட அதிகம் பதிவாகியது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் அதிக வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்த நிலையில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய ஏழு பேர் கொண்ட மத்திய குழு சென்னை வந்தது.

மத்திய உள்துறை இணைச் செயலாளர் ராஜிவ் சர்மா தலைமையில், நிதித்துறை ஆலோசகர், விவசாயத்துறை இயக்குநர், நீர்வளத்துறை இயக்குநர்கள் பாவியா பாண்டே, ஆண்பிகவுல்,விஜயராஜ் மோகன்,வரபிரசாத் உள்ளிட்ட ஏழு அலுவலர்கள் சென்னைககு வந்தனர்.

மத்திய குழு நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட பகுதியில் ஆய்வு செய்ய உள்ளது.

Tags:    

Similar News