ஜவுளிகடையில் செல்போன் திருடிவிட்டு ஒப்படைத்த பெண் : இப்படியும் ஒரு நேர்மை..!

அரியலூர் -ஜவுளிகடையில் செல்போன் திருடிய பெண் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து திருப்பிகொடுத்து சமரசம்

Update: 2021-05-05 06:30 GMT

பெண் செல் போன் எடுக்கும் சி.சி.டி.வி காட்சிகள் 

அரியலூர் அருகே வி.கைகாட்டியில்  தனியார் ஜவுளி ஸ்டோர் உள்ளது. இந்த ஜவுளிகடையில் வேலை பார்த்த ஒரு பெண்ணின் செல்போனை துணி எடுக்க வந்த பெண் ஒருவர் கால்களுக்கு அடியில் மறைத்து வைத்து. பின்னர் வேலை ஆட்கள் அந்த இடத்தை விட்டு நகர்ந்த பின் செல்போனை எடுத்து சென்ற சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவானது. 

மேலும் இந்த காட்சிகள் நேற்று இரவு முதல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இதனையடுத்து இச்சம்பவம் அறிந்த அதே கிராமத்தை சேர்ந்த பெண் செல்போனை வேறு ஒருவர் மூலமாக கடை உரிமையாளரிடம் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடை உரிமையாளரிடம் கேட்டபோது சிசிடிவி காட்சிகள்  சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து வேறு ஒருவர் மூலமாக அந்த பெண் செல்போனை திருப்பி கொடுத்ததாகவும், இதனால், இதுகுறித்து காவல் நிலையத்தில் எதுவும் புகார் அளிக்கவில்லை என கூறினார். இதனால் சமரசம் ஏற்பட்டதாக கூறினார்.

Tags:    

Similar News