எடப்பாடி பழனிசாமி - அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி.

அரசு பங்களாவில் இபிஎஸ் தொடர்ந்து தங்க அனுமதி ஓபிஎஸ்தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்பு.

Update: 2021-05-22 03:48 GMT

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.பங்களாவை காலி செய்ய தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார்.

எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள அரசு பங்களாவில் தொடர்ந்து தங்க தமிழக அரசு அனுமதி அளித்து கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணிதுறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் ஈபிஎஸ் தங்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஈபிஎஸ் வைத்த கோரிக்கையை ஏற்று 2011 முதல் தங்கி இருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்க அரசு அனுமதி அளித்துள்ளது.

பங்களாவை காலி செய்ய தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம், தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்த நிலையில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. புனரமைப்புப் பணிகள் முடிந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை பொதுப்பணித்துறை ஒப்படைக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 



Tags:    

Similar News