‘ஜாம்பி’ மருந்து பற்றி தெரிஞ்சுக்குங்க... இது ரொம்ப ஆபத்தானதுங்க...
Zombie Tamil- மாடு, குதிரைகளுக்கான ‘ஜாம்பி’ மருந்தை, மனிதர்கள் போதை மருந்தாக பயன்படுத்தி, தங்கள் அழிவை தேடிக்கொண்டுள்ளனர். நியூயார்க்கில், கடந்தாண்டு வரை இதை போதை வஸ்துவாக பயன்படுத்தியதால், 2,668 பேர் உயிரிழந்துள்ளனர்.
Zombie Tamil- இது ஜாம்பி மருந்து என அழைக்கப்படும் போதை வஸ்துவாக உள்ளது. ‘இந்தியா டுடே’ டிவிட்டரில் வெளியிட்ட ஒரு வீடியோ பதிவில், சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில், பல முக்கிய தகவல்களும் இடம்பெற்றுள்ளது. அதில் ஒரு காட்சி ‘ஜாம்பி’ திரைப்படத்தில் இருந்து வருகிறது .அதில் பெண் ஒருவர் ‘சைலாசின்’ என்ற மருந்தின் தாக்கத்தில் உள்ளார். அந்த பெண் ‘சைலாசின்’ என்ற போதை மருந்தின் தாக்கத்தில் இருப்பதை, அந்த படக்காட்சி வெளிப்படுத்துகிறது. மேலும், விநோதமாக செயல்படும் நபர்களின் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன. ஒரே மாதிரியான வீடியோக்கள், விந்தையாக நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் மனிதர்களை பற்றிய இணையம் முழுவதும் பரவுகின்றன.
ஜாம்பி மருந்து அல்லது ‘ட்ராங்க் டோப்’ என்றும் இந்த போதை வஸ்து அழைக்கப்படுகிறது. ‘சைலாசின்’ அமெரிக்காவின், பெண்டானில் சந்தையில் நுழைந்துள்ளது, மேலும், அது காட்டுமிராண்டி போல் போதை மருந்து என்பதால், மக்களிடையே பரவி வருகிறது, இது ஜாம்பி மருந்து சைலாசின் என்பது மனித பயன்பாட்டிற்கு அங்கீகரிக்கப்படாத ‘ஓபியாய்டு’ அல்லாத கால்நடைகளை அமைதிப்படுத்தும் மயக்க மருந்து. இந்த மருந்து, உண்மையில் குதிரைகள் மற்றும் மாடுகளுக்குப் பயன்படுத்தப்படுகிறது.
கால்நடைகளை அமைதிப்படுத்த, அதன் மைய நரம்பு மண்டலத்தை தூண்டி,. மனச்சோர்வு உருவாக்ககி, குதிரைகள் மற்றும் மாடுகளுக்கு அது தூக்கத்தை ஏற்படுத்துகிறது,
ஆனால், கால்நடைகளுக்கான ஜாம்பி மருந்தை, போதை வஸ்துவாக மனிதர்கள் பயன்படுத்துகின்றனர். அவ்வாறு பயன்படுத்தும் போது, அவர்களுக்கு மனச்சோர்வை உண்டாக்குகிறது. அது மறதியை ஏற்படுத்துகிறது, மனச்சோர்வை அதிகரிப்பதால், இது இதயத் துடிப்பைக் குறைக்கிறது. மனச்சோர்வு நீடிப்பதால், இது ஆபத்தான குறைந்த ரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
xylazine அமெரிக்காவில் கட்டுப்படுத்தப்பட்ட பொருள் அல்ல. ஏனெனில், இந்த ஜாம்பி மருந்து மனித பயன்பாட்டிற்காக தயாரிக்கப்படவில்லை. இது மற்ற மருந்துகளைப் போல FDA ஆல் கட்டுப்படுத்தப்படவில்லை. இன்று வரை நியூயார்க் செனட் மட்டுமே அதன் ஒழுங்குமுறை மசோதாவை நிறைவேற்றியுள்ளது.
இது சைலாசைனை கட்டுப்படுத்தப்பட்டதாகக் குறிப்பிடுகிறது. மனிதர்கள் மிகவும் பாதிக்கப்பட்ட இடங்களில் சைலாசின், முதன்முதலில் 2006 ல் பிலடெல்பியாவில் தோன்றியது. 2021 ல் இது 90 சதவீதம், ஓபியாய்டு மருந்து மாதிரிகளில் இருந்தது. விரைவில் அது சான் பிரான்சிஸ்கோ மற்றும் லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மாறியது. அது நியூயார்க் நகரத்திற்கு, இதன் பயன்பாட்டுக்கான வழி செய்துவிட்டது.
நியூயார்க் நகர சுகாதாரத் துறையின் அறிவிப்பின்படி, 2021ம் ஆண்டில் அதிகளவு ஜாம்பின் போதை வஸ்து பயன்பாட்டின் காரணமாக 2,668 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2