ரத்த கொதிப்பு நோய்க்கான அறிகுறிகள் என்ன?

உலகம் கொரோனா என்ற கொடிய தாக்கத்திலிருந்து தற்போது மெல்ல மெல்ல விடுபட்டு வருகிறது. இவையெல்லாம் தற்காலிக நோய் தாக்குதல்கள். ஆனால் நம் உடலில் ஏற்படும் நிரந்தர நோய்கள் பல உண்டு. அவற்று மிக முக்கியமானது ரத்தக்கொதிப்பு. ரத்தக்கொதிப்பு நோய் ஏன் வருகிறது, இதற்கான அறிகுறிகள் என்னென்ன என்பதைப்பற்றி விரிவாக பார்ப்போம்.

Update: 2022-07-31 06:10 GMT

மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய நோய்களில் ஒரு சிலவற்றினை டாக்டர்களாலேயே இனங்காணமுடிவதில்லை. பின்னர் பல கட்ட பரிசேதனைக்கு  பின்னர் இன்ன நோய் என கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை துவங்குகின்றனர். அந்த வகையில் நோய்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக  புதிது புதிதாய் தோன்றிக்கொண்டேயிருக்கிறது. மருத்துவ உலகம் வளர்ந்தாலும் இன்று வரை  ஒரு சில நோய்களுக்கு சரியான தீர்வு கிடைக்கவில்லை. இதில் ஒரு உதாரணம் புற்று நோய். மருந்து கண்டுபிடிக்கப்பட்டது என்று சொன்னாலும் அந்த நோயின் பாதிப்பு அதிகரித்துக்கொண்டேயிருக்கிறது. பலருக்கு இந்த நோயானது முற்றிய  பின்தான் தெரியவருவதால் அதற்கு பின்னர் சிகிச்சை மேற்கொண்டு பிரயோஜனம் இல்லாமல் போய்விடுகிறது.

எனவே அனைவரும் நாம் தெரிந்துகொளள்வேண்டிய முக்கிய அம்சம் நம்முடைய உடல்நிலையில் வழக்கத்துக்கு மாறான மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக தாமதிக்காமல் டாக்டர்களை சந்தித்து ஆலோசனை , சிகிச்சை பெறுவது மிக மிக முக்கியம். ஆனால் பெரும்பாலானோர் அந்த நேரத்தில்  அந்த மாற்றங்கள் சரியாகிவிட்டால்  இதனால் நமக்கு எந்த பிரச்னையும் இல்லை என சாதாரணமாக கருதி விட்டுவிடுகின்றனர். அதே பிரச்னை மறு முறை வரும்போது நிலைமை மிக விபரீதமாகி உயிரிழப்பு வரை செல்கிறது.ஏங்க நோய்களை சும்மா சொல்லக்கூடாதுங்க... அது நமக்கு ஒரு சில அறிகுறிகளை முன்காட்டி நமக்கு எச்சரிக்கை விடுக்கிறது. அந்த எச்சரிக்கைக்கு பயந்து சிகிச்சை மேற்கொள்பவர்கள் மட்டுமே  பிழைக்கின்றனர். அலட்சியம் காட்டுபவர்கள் அவதிப்படுகின்றனர் என்பதே உண்மை.

ரத்தக் கொதிப்பு

ரத்தம் உடல் முழுவதும்  செல்வதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு  அழுத்தம் தேவை.  இந்த அழுத்தம் அதிகமாகும்போது  அதையே ரத்தக்கொதிப்பு  என்கிறோம். ரத்த அழுத்தத்தில்   சுருக்கழுத்தம், விரிவழுத்தம்  என இரண்டு அலகுகள் உள்ளன. 

2 வது  வகையில் உள்ளவர்கள்  ரத்தக்கொதிப்பு வராது  தடுக்க வேண்டுமானால் , உணவு மற்றும்  வாழ்க்கை முறையில் கவனம் செலுத்த வேண்டும்.  அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள் அதிக அளவிலும், கொழுப்பு குறைவான  அளவிலும் இருக்க வேண்டும். 

*இயற்கையாகவே  வயதாக ஆக  ரத்த நாளங்கள்  அதனுடைய  ஜவ்வுத்தன்மையை இழப்பதால் நாளங்களின் அகலம் குறுகி ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது.  மரபணுக்களால் மட்டுமின்றி  அதே உணவு,  உடற்பயிற்சியின்மை,  புகைபிடித்தல் என்று பெற்றோர்  வாழ்ந்த சூழ்நிலையிலேயே  வாழும்போது   குழந்தைகளுக்கும்  அந்த நோய்கள் வரும் வாய்ப்பு  அதிகமாகிறது. தற்போதைய வாழ்க்கை முறையில்  அதிக ரத்த அழுத்தத்திற்கு   மன அழுத்தமே  முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

உடலின் எடை அதிகரிப்பை  பொறுத்து ரத்தக்கொதிப்பு  வரும் வாய்ப்பு அதிகரிக்கிறது.  உணவில் அதிகம் உ்ப்பு சேர்த்துக்கொள்ளுதல், அதிக கொழுப்பு,  மற்றும் குறைவான நார்ச்சத்துள்ள உணவுகள்,  மது மற்றும் புகைப்பழக்கம், சரியான உடற்பயிற்சி  இன்மை,நீரிழிவு நோய்.

*பெரும்பான்மையோருக்கு வரும் ரத்தக்கொதிப்பு இந்த வகைதான். இதற்கு இன்னமும், காரணம் கண்டறியப்படவில்லை. இது சிறுநீரகம்  மற்றும் நாளமில்லா  சுரப்பிகளில் ஏற்படும்  பாதிப்புகள்  மற்றும் சில வகை  மருந்துகளால்  ஏற்படுகிறது.  கர்ப்ப காலத்தில்  வரும் ரத்தக்கொதிப்பும் இந்த வகைதான்.

*பொதுவாக இது எந்தவித அறிகுறிகளையும்  ஏற்படுத்துவதில்லை. மற்ற பல காரணங்களுக்காக உடலைப்  பரிசோதிக்கும்போது  இது கண்டுபிடிக்கப்படுகிறது.  எனினும் சிலருக்கு  ரத்த அழுத்தம் அதிகமாகும்போது தலைச்சுற்றல், தலைவலி போன்றவை ஏற்படலாம்.

*மாரடைப்பு,  இதயத்துடிப்பில் கோளாறு,  இதயம் பெரிதாகுதல், பக்கவாதம்,  மூளையில் ரத்தக்கசிவு,  ரத்த நாளங்களில்  நோய்கள்,  சிறுநீரகத்தில் பாதிப்பு,  மற்றும் கண்களில் பாதிப்பு  போன்றவை. 

*ரத்தக்கொதிப்பு உள்ளவர்கள்  டாக்டரை அணுகி,  பரிசோதித்து, தவறாது மருந்துகள் உட்கொள்ளவேண்டும்.40வயதுக்கு  மேற்பட்டவர்கள்  ஆறு மாதங்களுக்கு  ஒருமுறை தவறாது  ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். ரத்தத்தில்  சர்க்கரை   மற்றும் கொழுப்பின்  அளவைக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். கர்ப்பிணிப் பெண்கள்  கர்ப்பகாலம் முழுவதிற்கும் ரத்த அழுத்தத்தைப்  பரிசோதனை செய்து கொள்ளவேண்டும். 

*உணவுமுறைகள் 

அதிக ரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கு  உணவில் பொட்டாசியம், மெக்னீசியம், கால்சியம் ஆகிய தனிமங்கள்  அதிக அளவிலும், கொழுப்பு குறைவான  அளவிலும் இருக்க வேண்டும். பொதுவாக பல்வேறு   காய்கறிகளையும், பழங்களையும், உணவில் சேர்த்துக்கொண்டாலே இவை கிடைத்துவிடும்.  சோடியம் என்றும்  தனிமத்தைத் தவிர்ப்பது நல்லது. சமையல் உப்பு, பேக்கரியில் உபயோகப்படுத்தும்  சோடா உப்பு,  சைனீஸ் உணவில்   பயன்படுத்தப்படும்  அஜினோமோட்டோவில்  சோடியம் அதிகம் இருக்கும். எனவே இவற்றை  தவிர்க்கவும். வடகம், ஊறுகாய்,  சாஸ், கெட்சப், பீட்ஸா, பர்கர் போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நல்லது.  இவற்றில் உப்பு  அதிகம்இருக்கும். 

*ஒரு வாரத்திற்கு  குறைந்தபட்சம்  மூன்று  முறையாவது  இருபது நிமிடங்கள் வீதம் மிதமான ஓட்டம், வேகநடை, நீச்சல் போன்றவற்றில்  ஈடுபட வேண்டும். 

*யோகா பயிற்சி

தொடர் யோகப்பயிற்சிகளால்  குறைந்தபட்சம்  பத்து முதல்  பதினைந்து அளவு வரை ரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வுகள்  தெரிவிக்கின்றன.  யோகப்பயிற்சிகளால்  உடல் எடை சீராவதால்,  ரத்தஅழுத்தமும் சீராகும் வாய்ப்பு  அதிகரிக்கிறது. இரவில் அனைவருக்கும்  ரத்த அழுத்தம்  பொதுவாக குறைந்தாலும்,  ரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு  மட்டும்இரவிலும் கூட ரத்த அழுத்தம் குறைவதில்லை.  யோகா இந்த நிலையை மாற்றுகிறது. 

தொடர் யோக  பயிற்சிகள்  மனஅழுத்தத்தைக் குறைக்கிறது. எனவே மன அழுத்தத்தினால்   ஏற்படும் அதிகப்படியான   ரத்த அழுத்தம் நீங்குகிறது.  யோகா தளர்வு   நிலையை அளிப்பதால்   மன அழுத்தம் நீங்கும் வாய்ப்பு  அதிகரிக்கிறது.  யோகப்பயிற்சிகள் 

அனைத்துமே  தானியங்கி நரம்பு மண்டலத்தைச் சமன் செய்வதால்   ரத்த அழுத்தம் சீராக  இருக்க உதவுகிறது. யோகா,தியானம்,  மூச்சுப்பயிற்சி,  முத்திரை ஆரோக்யமான   உணவு,  மகிழ்வான  சூழ்நிலை



இவற்றை கடைப்பிடித்தால்   நாம் ஆரோக்யமாக இருக்கலாம். 






Tags:    

Similar News