கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்

கோவை மோசடி வழக்கில் சுமார் 12 கோடி பணம், 140 பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.;

Update: 2024-05-08 00:23 GMT
கோவை மோசடி வழக்கில் கோடிக்கணக்கான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல்

பறிமுதல் செய்யப்பட்ட பணம்

  • whatsapp icon

கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார். தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணி புரிந்து வந்த 13 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்து, 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடி குறித்து அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மோசடியில் ஈடுபட்ட வசந்த், சிவகுமார், ஷீலா, தீக்ஷா, சக்தி சுந்தர் என மொத்தம் ஐந்து பேரை காவல் துறையினர் கைது செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 5 பேரையும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் இன்று குற்றவாளிகளிடமிருந்து சுமார் 12 கோடி பணம், 140 பவுன் நகை, 100 கோடி மதிப்பிலான முக்கிய ஆவணங்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

மேலும் அவர்களது வங்கி கணக்குகளை முடக்கம் செய்துள்ளனர். இதனை தொடர்ந்து போலீசார் நீதிமன்றத்தில் பணம் மற்றும் ஆவணங்களை ஒப்படைத்து மீண்டும் குற்றவாளிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பண மோசடி வழக்கில் கோடிக்கணக்கான ரூபாய் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News