இங்கிலாந்து பிரதமர் அலுவலகத்தில் என்ன இருக்கிறது?

லண்டனில் இந்திய சுதந்திரதினவிழாவில் பேசிய இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக்.
லண்டனில் இந்திய சுதந்திர விழா கொண்டாட்டம் நடந்தது. அப்படியே கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் கலந்து கொண்டு பேசியது இப்போது பரபரப்பு செய்தியாகின்றது.
இந்திய மத அறிஞர் மொராரி பாபு, கேம்ப்ரிட்ஜ் பல்கலை வளாகத்தில் ராமகதை தொடர்பான உபன்யாசம் நிகழ்த்தி வருகிறார். இந்திய சுதந்திர தினத்தை தொடர்ந்து அங்கே நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க சிறப்பு விருந்தினராக வந்தார் ரிஷி சுனக்.
அவர் தன் பேச்சில் சொன்னார். "நான் இங்கு பிரதமராக வரவில்லை. ஹிந்துவாக வந்துள்ளேன் , அடிக்கடி ராமாயணத்தையும், பகவத் கீதையையும் மற்றும் ஹனுமன் சாலீசாவையும் நினைந்து கொள்வேன். என் வாழ்க்கையின் சவால்களை தைரியத்துடன் எதிர்கொள்ளவும், பணிவுடன் ஆட்சி செய்யவும், தன்னலமின்றி பணியாற்றவும் ராமன் எனக்கு வழிகாட்டியாக இருப்பார்.
மொராரி பாபுவுக்கு பின்னால், தங்க நிறத்திலான ஹனுமன் படம் உள்ளது போல், எனது அலுவலகத்திலும் ஹனுமன் உள்ளார். எனது மேஜை மீதும் விநாயகர் மகிழ்ச்சியுடன் அமர்ந்துள்ளார். இதனை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன் என்றார். எவ்வளவு அழகான வார்த்தைகள்?சுதந்திரம் கிடைத்த 77 ஆண்டுகளில் இந்திய ராமாயணம் லண்டனை ஆக்கிரமிகின்றது என்பது சிலிர்ப்பூட்டும் செய்தி. 100 ஆண்டுக்கு முன் அந்த லண்டனில் இப்படி ஒரு காட்சி நடக்கும் என யாராவது கருதியிருக்க முடியுமா? அப்படி அடுத்த 100 ஆண்டில் இன்னும் பெரும் ஆச்சரியங்கள் நிகழலாம். காலம் அப்படித்தான் மாறும் என்று ராமபக்தர்கள் கூறி வருகின்றனர்.
100 ஆண்டுகளுக்கு முன்பு எம்மை அடிமைப்படுத்தி இருந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு இன்று இந்திய வம்சாவளியில் வந்த ஒருவர் பிரதமராக இருக்கிறார். காலங்கள் இன்னும் மாறிக்கொண்டிருக்கின்றன. மாற்றம் ஒன்றே மாறாதது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu