Begin typing your search above and press return to search.
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவர் குண்டர் சட்டத்தில் அடைப்பு
போளூரில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட இருவரை குண்டர் சட்டத்தில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
HIGHLIGHTS
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டம், நவாப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பையன் மற்றும் தங்கராஜ் ஆகிய இரண்டு நபர்களும் நவ்வாப்பாளையம் கிராமத்தில் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக போளூர் மதுவிலக்கு பிரிவு காவல் ஆய்வாளர் வழக்குபதிவு செய்து மேற்கண்ட இரண்டு நபர்களையும் கைது செய்து சிறையில் அடைத்தார்.
மேற்கண்ட நபர்கள் தொடர்ந்து சட்டவிரோத செயலில் ஈடுபடுவதை தடுப்பதற்காக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் அடைக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
பரிந்துரையின்பேரில் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் மேற்கண்ட நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, வேலூர் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.