/* */

ஆரணி மக்களவைத் தொகுதியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு

சிப்காட் விரிவாக்க விவகாரத்தில் நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்,தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

HIGHLIGHTS

ஆரணி மக்களவைத் தொகுதியில் தேமுதிக பிரேமலதா விஜயகாந்த் வாக்கு சேகரிப்பு
X

அதிமுக வேட்பாளர் ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

செய்யாறு சிப்காட் விரிவாக்க விவகாரத்தில் மேல்மா விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நிலங்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அவா் பேசியதாவது:

போளூரில் நீண்ட நாள்களாக ரயில்வே மேம்பாலப் பணி நடைபெறாமல் உள்ளது.

இந்தப் பணியும், போளூரை அடுத்த கரைப்பூண்டி தனியாா் சா்க்கரை ஆலையை திறக்கவும், விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய கரும்பு நிலுவைத் தொகையை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும். போளூா் பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயா்ந்தவும், இந்தப் பகுதியில் அரசுக் கல்லூரி தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆரணியில் பட்டுப் பூங்கா தொடங்க தேவையான நடவடிக்கைகள் விரைந்து மேற்கொள்ளப்படும். செய்யாறு சிப்காட் விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்தும் விவகாரத்தில் மேல்மா பகுதி விவசாயிகளுக்கு ஆதரவாக கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து நில மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்

திருவண்ணாமலை மத்திய மாவட்ட அதிமுக செயலா் ஜெயசுதா, தேமுதிக மாவட்டச் செயலா் சரவணன், மாவட்ட அவைத் தலைவா்.ரவிக்குமாா், மாவட்டப் பொருளாளா் ஜான்பாஷா, மாநில பொதுக் குழு உறுப்பினா்.சங்கா், மாவட்ட துணைச் செயலா் திருநாவுக்கரசு, நகரச் செயலா் மணிகண்டன், ஒன்றியச் செயலா்கள் மற்றும் அதிமுக, தேமுதிக நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தொடர்ந்து ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் தெற்கு ஒன்றியத்தில் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா். பிரசாரத்துக்கு மாவட்டச் செயலா் எல்.ஜெயசுதா தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சங்கா் வரவேற்றாா்.

ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன், அதிமுக செய்தி தொடா்பாளா் பாபுமுருகவேல் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

ஆரணி தெற்கு ஒன்றியத்தில் உள்ள கரிகந்தாங்கள், ஆகாரம், விண்ணமங்கலம், ராந்தம், தெள்ளூா், மதுரைபெரும்பட்டுா், கரிப்பூா், தேவிகாபுரம், முருகமங்கலம், தச்சூா், அரையாளம், சீனிவாசபுரம், புங்கம்பாடி, மலையாம்பட்டு, கைக்கிளைதாங்கள், காமக்கூா்பாளையம், நடுக்குப்பம், சம்புவராயநல்லூா், காமக்கூா் ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. பிரசாரத்தில் மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராசன், ஒன்றியச் செயலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Updated On: 3 April 2024 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் நேற்று 83.6 மில்லி மீட்டர் மழையளவு பதிவு
  2. பொன்னேரி
    பொன்னேரி அருகே அம்மன் கோவில் பூட்டை உடைத்து நகை பணம் கொள்ளை
  3. கும்மிடிப்பூண்டி
    பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மூன்று பேர் கைது
  4. அரசியல்
    பா.ஜ.க அழுத்தம் கொடுத்தும் ராஜினாமா செய்யாதது ஏன்? கெஜ்ரிவால்
  5. தேனி
    தேனியில் ஆட்டு இறைச்சி விலை கிடுகிடு உயர்வு!
  6. தேனி
    ஐந்து நாள் மழை பெய்தும் அணைகளுக்கு நீர் வரத்து இல்லை
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 33 கன அடி அதிகரிப்பு
  8. ஈரோடு
    பவானிசாகர் அணை நீர்மட்டம் 44.50 அடியாக சரிவு
  9. காஞ்சிபுரம்
    கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ள வங்கி ஊழியர்..
  10. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் அரசு பள்ளி மாணவர்கள் சாதனை