/* */

மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

சேத்துப்பட்டில் மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு போளுர் சாலையில் உள்ள தாலுகா அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. விவசாயிகள் தொழிலாளர் சங்க தாலுகா அமைப்பாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். விவசாயிகள் தொழிலாளர்சங்க தாலுக்கா பொருளாளர் சேகர் விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர் அண்ணாமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மத்திய அரசின் 2020 மின்சார திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும்.மேலும் விவசாயிகளின் விளைபொருட்களை விலை நிர்ணயம் செய்ய குழுக்கள் அமைக்க வேண்டும். மேலும் டெல்லியில் 381 நாட்கள் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். இதில் 715 விவசாயிகள் உயிர்த்தியாகம் செய்தனர்.

இவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கியும் நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தினர்.

அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட பொருளாளர் உதயகுமார் அகில இந்திய விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வெங்கடேசன் உள்பட 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சிபிஎம் சேத்துப்பட்டு வட்டார கமிட்டி பொறுப்பாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

Updated On: 22 March 2022 1:29 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒரு மாத திருமண நாள் வாழ்த்துகள்: அன்பை வெளிப்படுத்தும் இனிய சொற்கள்
  2. திருமங்கலம்
    மதுரை மாவட்டத்தில் உள்ள விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி விழா
  3. லைஃப்ஸ்டைல்
    பசுமை நிறைந்த நினைவுகளே! பள்ளி நட்பின் இனிய நினைவுகள்
  4. தேனி
    பணி நிரவல் கலந்தாய்வினை கை விட ஆசிரியர் சங்கம் அரசுக்கு கோரிக்கை
  5. சூலூர்
    தசைநார் சிதைவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ கிரிக்கெட் போட்டி
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் கடம்பத்தூர் அருகே மத போதகரை அரிவாளால் வெட்டிய மகன்
  7. சிங்காநல்லூர்
    தேர்தல் ஆணையம் வாக்குப்பெட்டிகளை முறையாக கண்காணிக்க வேண்டும் :...
  8. திருப்பரங்குன்றம்
    வெடிகுண்டு மிரட்டலையடுத்து மதுரை விமான நிலையத்துக்கு போலீஸ்
  9. தொழில்நுட்பம்
    ஆபத்தான செயலிகள்: உஷாராக இருங்கள்!
  10. ஆவடி
    திருவள்ளூர் அருகே விஷம் குடித்து ஜிம் பயிற்சியாளர் தற்கொலை