/* */

போளூர் அருகே ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

போளூர் அருகே ஓடை கால்வாயில் அடித்துச் செல்லப்பட்டு விவசாயி உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த அத்திமூர் களியம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனியப்பன் (வயது 55). விவசாயி.

இவர் இன்று காலை அரும்பலூரில் உள்ள தனது தங்கை வீட்டுக்குச் செல்ல புறப்பட்டார். வழியில் ஒடநகரம் ஓடைகால்வாயை கடந்து செல்ல வேண்டும்.

ஆனால், மழையால் ஒடநகரம் ஓடைகால்வாயில் அதிகளவில் மழைவெள்ளம் ஓடுகிறது. முனியப்பன் அரும்பலூர் செல்ல ஓடைகால்வாயில் இறங்கி தண்ணீரில் நீந்தி கடக்க முயன்றார். அப்போது திடீரென ஓடைகால்வாய் வெள்ளத்தில் அவர் அடித்துச் செல்லப்பட்டார்.

அப்போது அந்த வழியாக வந்தவர்கள் பார்த்து விட்டு உடனே போளூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர் .

தீயணைப்பு நிலைய அதிகாரி ராஜேந்திரன் தலைமையில் வீரர்கள் தேசிங்கு, சக்தி தாஸ் மற்றும் பலர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 மணி நேர தேடலுக்கு பின் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த முனியப்பனை பிணமாக மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 14 Nov 2021 4:50 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...