/* */

காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு

காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் ஊராட்சி தலைவர்களுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தினார்.

HIGHLIGHTS

காலை உணவு திட்டம் குறித்து கலெக்டர் ஆய்வு
X

காலை உணவு திட்டத்தினை நேரில் ஆய்வு செய்து மாணவர்களுடன் உணவு உண்ட கலெக்டர் முருகேஷ் மற்றும் அதிகாரிகள்.

காலை உணவு திட்டம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் ஊராட்சி தலைவர்களுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முருகேஷ் அறிவுறுத்தினார்.

ஜவ்வாதுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஊராட்சி மன்ற செயலர்களுடனான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

ஊராட்சி மன்ற தலைவர்கள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரநிதிகள் வாரத்தில் 2 முறை காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு குறித்து ஆய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த காலை உணவு திட்டமானது ஏழை, எளிய குழந்தைகளுக்கு ஒரு இன்றியமையாத திட்டமாக உள்ளது. அந்த திட்டத்தில் உணவிற்கு பயன்படுத்தப்படும் அரிசி, மளிகை பொருட்கள் தரமான முறையில் உள்ளதா, சத்தான காய்கறிகள் பயன்படுத்தப்படுகின்றதா, உணவு சுகாதாரமான முறையில் சமைக்கப்படுகின்றதா என்பது குறித்தும் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குழந்தை திருமணம் நடைபெறுகின்றது என்று தெரிந்தால் தடுத்து நிறுத்தி சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும். கலைஞரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் மூலம் வீடுகள் வழங்க கணக்கெடுப்பு பணிகள் முழுமையாக நடைபெற்று உள்ளதா என்றும் பயனாளிகளை தேர்வு செய்யும் போது ஆதார் அட்டை, குடும்ப அட்டை மற்றும் குடும்ப அட்டையில் உள்ள முகவரி சரியாக உள்ளதா என்பதை ஆய்வு மேற்கொண்ட பின்னரே பயனாளிகளை தேர்வு செய்ய வேண்டும்.

ஜமுனாமரத்தூரில் உள்ள 11 ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் குறித்தும், அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கலைஞரின் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து செயல்படுத்தப்படும் திட்டப்பணிகள் முழுமையாக ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறதா என்றும் கண்காணிக்க வேண்டும்.

மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டப் பணிகள், குடிநீர் திட்டப்பணிகள் மற்றும் ஊரக சாலை பணிகள் ஆகியவற்றை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு வழங்க வேண்டும். மேலும் தற்போது வரை நிலுவையில் உள்ள அனைத்து பணிகளையும் விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) வீர் பிரதாப் சிங், உதவி கலெக்டர் (பயிற்சி) ரஷ்மி ராணி, ஊராட்சி மன்றத் தலைவர்கள், ஊராட்சி செயலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Feb 2023 11:37 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  2. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  3. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  4. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  5. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  6. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  8. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  9. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?