/* */

போளூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது

போளூர் அருகே பிளஸ்-1 மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

போளூர் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் கைது
X

போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஜோ.எபிநேசர். 

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி அங்குள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.அந்த மாணவிக்கு அதே கிராமத்தை சேர்ந்த கெல்வின் என்ற ஜோ.எபிநேசர் (வயது 22) என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்தார்.

இதுபற்றி கிராமத்தினர் திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பிரிவை சேர்ந்த பரமேஸ்வரன் சம்பந்தப்பட்ட கிராமத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதையடுத்து அவர், வாலிபர் மீது போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா, சப்-இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஜோ.எபிநேசரை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பள்ளி மாணவியை திருவண்ணாமலையில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

Updated On: 25 April 2022 9:56 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகரிடம் சிபிசிஐடி விசாரணை
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. காஞ்சிபுரம்
    ராஜீவ் நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் தலைமையில் நினைவு அஞ்சலி
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவேந்தல் நிகழ்ச்சி
  6. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  7. லைஃப்ஸ்டைல்
    நகத்த கவனிச்சீங்களா? புற்றுநோய் வர வாய்ப்பிருக்காமே!
  8. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  9. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  10. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!