/* */

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை அருகே பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்டு இருந்த பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்

HIGHLIGHTS

பாலம் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த கார்ணாம்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ் (வயது 40). தொழிலாளி. இவருக்கு ஜெயந்தி என்ற மனைவியும் 2 மகள்களும் உள்ளனர். கனகராஜ் உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக பைக்கில் கார்ணாம் பூண்டி கிராமத்தில் இருந்து களஸ்தம்பாடி கிராமத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.

கழிக்குளம் கிராமத்தில் உள்ள ஏரிகரை பகுதியில் அருகே வரும்போது சாலையின் நடுவே பாலம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டி இருந்தனர். இதனை கவனிக்காத கனகராஜ் அதில் நிலை தடுமாறி பாலம் கட்டும் பள்ளத்தில் விழுந்தார். கனகராஜின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். படுகாயம் அடைந்த பள்ளத்தில் விழுந்து கிடந்த கனகராஜை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் கனகராஜன் உடலை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

Updated On: 24 July 2022 1:03 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது