/* */

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம்

விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை நிலுவை தொகையை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம் என விவசாயிகள் அறிவிப்பு

HIGHLIGHTS

விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்காவிட்டால் கரும்பு ஏற்றி வரும் வாகனங்களை மறிப்போம்
X

கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை அலுவலக முகப்பில் உள்ள பெயர் பலகையில் கரும்பு விவசாயிகள் துண்டு பிரசுரங்களை ஒட்டினர்  

விழுப்புரம் மாவட்டம் பாலப்பாடி கிராமத்தில் தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர், கரிக்கலாம்பாடி, கனியாம்பூண்டி, வேடநத்தம், மங்கலம், வேட்டவலம், கொளத்தூர், சோமாசிபாடி உள்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த கரும்பு விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் கரும்புகளை இந்த சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தனர். கரும்பு விவசாயிகளுக்கு சேர வேண்டிய நிலுவை தொகை ரூ.2 கோடிக்கு மேல் வழங்கப்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது. கரும்பு அறுவடை இல்லாத நிலையில் ஆலையும் இயங்கவில்லை.

இந்தநிலையில் நேற்று முன்தினம் முதல் ஆலை இயங்க இருப்பதாக தகவல் வெளியானது. இதனை அறிந்த கரும்பு விவசாயிகள் தங்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையை வழங்காமல் ஆலை அரவையை தொடங்கக்கூடாது என கோரிக்கை வைத்தனர். ஆனால் சர்க்கரை ஆலை நிர்வாகம் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தாமல் ஆலையை திறக்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த கீழ்பென்னாத்தூர் பகுதி கரும்பு விவசாயிகள் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் செல்லும் வாகனங்களை வழிமறித்து நிறுத்துவோம் என அறிவித்துள்ளனர். மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகத்தை கண்டித்தும் துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர்.

கீழ்பென்னாத்தூரில் உள்ள தனியார் சர்க்கரை ஆலை மண்டல அலுவலக முகப்பில் உள்ள பெயர் பலகையில் கரும்பு விவசாயிகள் துண்டு பிரசுரங்களை ஒட்டியும் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Updated On: 22 July 2021 7:40 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  2. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!
  3. திருவண்ணாமலை
    விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட வாலிபர் தற்கொலை முயற்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை: உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் உன்னத நாள்
  5. ஆன்மீகம்
    அன்பிற்கும் அமைதிக்கும் வழிவகுக்கும் ரமலான்
  6. ஆரணி
    பாலியல் தொல்லை வழக்கில் விடுதி வார்டனுக்கு 20 ஆண்டு ஜெயில்!
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி பாலக்கரையில் உள்ள சிவாஜி சிலை சங்கிலியாண்டபுரத்திற்கு
  8. திருவள்ளூர்
    மகளிர் சுய உதவி குழு உறுப்பினர் தாக்கப்பட்டது பற்றி போலீஸ் விசாரணை
  9. க்ரைம்
    கரூர் அருகே விவசாய கிணற்றில் குளித்த 3 மாணவர்கள் நீரில் மூழ்கி...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் அன்பில் தர்மலிங்கத்தின் 105 வது பிறந்த நாள் விழா