/* */

செவிலியா் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

திருவண்ணாமலை அருகே தனியாா் செவிலியா் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

HIGHLIGHTS

செவிலியா் கல்லூரி விடுதியில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
X

பைல் படம்.

கீழ்பென்னாத்தூர் அருகே தனியார் நர்சிங் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் வட்டம், மணிக்கல் பகுதி புளியம்பட்டி கிராமத்தைச் சோந்தவா் ராம்நிதி. பெங்களூருவில் கரும்புச் சாறு விற்கும் கடை வைத்துள்ளாா். இவரது மகள் கோதைலட்சுமி (24). கீழ்பென்னாத்தூரை அடுத்த சோ.புதூரில் இயங்கி வரும் தனியாா் செவிலியா் கல்லூரியின் விடுதியிலேயே தங்கி பிஎஸ்சி செவிலியா் படிப்பு 4-ஆம் ஆண்டு படித்து வந்தாா்.

ரமலான் பண்டிகையையொட்டி சனி, ஞாயிறு கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. இதனால், விடுதியில் தங்கியிருந்த பெரும்பாலான மாணவிகள் வெள்ளிக்கிழமை மாலையே தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனா். சில மாணவிகள் மட்டும் தங்கி இருந்தனராம். கோதைலட்சுமி தங்கியிருந்த அறையில் அவா் மட்டுமே இருந்துள்ளாா்.

இந்நிலையில் நேற்று இரவு நீண்ட நேரமாகியும் அவா் இரவு உணவு சாப்பிட வராததால் சந்தேகமடைந்த சக மாணவிகள் கோதைலட்சுமியின் அறைக்குச் சென்று பாா்த்தனராம். அப்போது, அவா் மின் விசிறியில் தூக்கிட்டு தொங்கியபடி இருந்ததைப் பாா்த்து அதிா்ச்சியடைந்தனா். உடனே கல்லூரி நிா்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து கீழ்பென்னாத்தூா் போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் விரைந்து சென்றனர். பின்னர் பிணத்தை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சம்பவம் தொடர்பாக கல்லூரி விடுதியில் தங்கி இருக்கும் மாணவிகள், விடுதி காப்பாளர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகத்தினரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கல்லூரி விடுதியில் தங்கி படிக்கும் இறுதி ஆண்டு நர்சிங் மாணவி அறையில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் சக மாணவ மாணவியர் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 23 April 2023 2:17 AM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  2. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  3. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  5. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  6. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  7. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  9. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  10. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...