/* */

கீழ்பென்னாத்தூரில் 10-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

கீழ்பென்னாத்தூரில் 10-வது நாளாக விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கீழ்பென்னாத்தூரில் 10-வது நாளாக விவசாயிகள்  காத்திருப்பு போராட்டம்
X

காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்தபடி 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழகம் முழுவதும் 20 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் கடந்த 5-ந் தேதி முதல் நடந்து வருகிறது.

கீழ்பென்னாத்தூரில் விவசாயிகள் 10-வது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை முன்னிட்டு டிராக்டர்களுடன் பேரணி நடைபெற்றது

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் கீழ்பென்னாத்தூர் ஒழுங்கு முறை விற்பனைக் கூடம் எதிரில் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி கடந்த 5-ந் தேதி முதல் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று 10-வது நாளாக காத்திருப்பு போராட்டம் நடந்தது. சுற்றுப்புற ஊர்களில் இருந்து விவசாயிகள் உழவுக்கு பயன்படுத்தி வரும் 30-க்கும் மேற்பட்ட டிராக்டர்களுடன் பேரணியாக போராட்டத்தில் கலந்து கொள்ள வந்தனர்.

கீழ்பெண்ணாத்தூர் சந்தை மேட்டில் இருந்து தொடங்கிய டிராக்டர் பேரணி முக்கிய சாலைகள் வழியாக சென்று காத்திருப்பு போராட்டம் நடக்கும் இடத்தை அடைந்தது.

அப்போது மாவட்ட அவை தலைவர் குணசேகரன் , மாவட்ட செயலாளர் ஏழுமலை , கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய செயலாளர் கேசவன் , கொள்கை பரப்பு செயலாளர் முனிராஜன் , அமைப்பு செயலாளர் நடராஜன் உட்பட பலரும் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் விவசாயி சங்க நிர்வாகிகள் பேசும்போது, விவசாயிகளின் உற்பத்திப் பொருள்களுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதுதான் மிக, மிக முக்கியப் பிரச்னையாக உள்ளது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் நோக்கில் 10 அம்சக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து அறவழியில் விவசாயிகளை பெரும் அளவில் திரட்டி விவசாயிகளின் அனைத்து உற்பத்தி பொருட்களுக்கு விலை நிர்ணயம், கொள்முதல் இவற்றுக்கான உத்தரவாதம், சட்ட பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொடர்ந்து 30 நாட்கள் விவசாயிகள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெறும். என வலியுறுத்தி பேசினார்கள்

இதில் இயற்கை வேளாண் விவசாயிகள் கீழ்பெண்ணாத்தூர் கோதண்டராமன் , சிறுநாத்தூர் கிருஷ்ணன் , சமூக ஆர்வலர்கள் ராஜா , கோவிந்தன் , சகாதேவன் , தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகிகள் உட்பட 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். தொடர் போராட்டம் காரணமாக கீழ்பென்னாத்தூர் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Updated On: 15 July 2023 1:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது