செய்யாறில் கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது

X
By - S.R.V.Bala Reporter |14 Dec 2021 7:34 PM IST
செய்யாறில் கஞ்சா வைத்திருந்த 5 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
செய்யாறு இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த வாலிபர்களை மடக்கிப் பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர்கள் கஞ்சா பாக்கெட்டுகளை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து வடதண்டலம் கிராமத்தை சேர்ந்த வேலியப்பன் (வயது20), கீழ்புதுபாக்கத்தை சேர்ந்த விகல் (23), கொட நகரை சேர்ந்த கோபி (22), கண்ணியம் நகரை சார்ந்த மணி (28), வெங்கட்ராமன் பேட்டை சேர்ந்த புள்ளிமான் ராஜா (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும் இதுகுறித்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
Tags
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu