/* */

காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு செய்யாறு நீதிமன்றத்தில் தஞ்சம்

செய்யாறு நீதிமன்றத்தில் காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு செய்யாறு நீதிமன்றத்தில் தஞ்சம்
X

செய்யாறு ஒருங்கிணைந்த நீதிமன்றம்.

செய்யாறு நீதிமன்றத்தில் நேற்று, காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன் மகள் அபிராமி. சென்னை ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கடந்த 10ம் தேதி அதிகாலை முதல் அபிராமியை காணவில்லையாம். இதுகுறித்து அவரது தந்தை கார்த்திகேயன் பிரம்மதேசம் போலீசில் புகார் கொடுத்திருந்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான அபிராமியை தேடி வந்தனர்.

இந்நிலையில், அபிராமி அதே பகுதியை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் சங்கர் மகன் பாரதி என்பவரை திருமணம் செய்து கொண்டு, செய்யாறு குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று காலை 10.30 மணியளவில் தஞ்சம் அடைந்தார்.

இவர்கள் இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதாகவும், இவர்களது காதலுக்கு இரு வீட்டிலும் எதிர்ப்பு இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், கடந்த 10ம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, சென்னை மயிலாப்பூரில் உள்ள திருமண மையத்தில் திருமணம் செய்து கொண்டனராம்.

தொடர்ந்து, இந்த காதல் தம்பதி செய்யாறு நீதிமன்றத்தில் நேற்று தஞ்சம் அடைந்தனர். அப்போது, காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரை ரத்து செய்ய வேண்டும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.

இத்தகவலை அறிந்ததும் செய்யாறு டிஎஸ்பி சின்னராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜீவராஜ் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். நீதிமன்றத்தில் சரண் அடைந்ததும் காணாமல் போனதாக கொடுக்கப்பட்ட புகாரை ரத்து செய்து, அவர்கள் இருப்பிடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்குமாறு மேஜிஸ்திரேட் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் பாதுகாப்புடன் காதல் தம்பதி அவர்கள் வசிக்கும் இடத்திற்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். காதல் தம்பதி பாதுகாப்பு கேட்டு நீதிமன்றத்தில் தஞ்சம் அடைந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 20 Jan 2024 1:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க