/* */

கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்

செய்யாறு தாலுகா வெங்கோடு கிராமத்தை சேர்ந்த மக்கள் கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த பொதுமக்கள்
X

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம பொதுமக்கள்.

செய்யாறு தாலுகா வெங்கோடு கிராம ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் அந்த பகுதியில் கல்குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தொிவித்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

முன்னதாக அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்றத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் வெங்கோடு கிராம ஊராட்சி எல்லைக்கு உட்பட்ட தனியார் நிலத்தில் கல்குவாரி அமைப்பதை தடை செய்ய வேண்டும்.

கல்குவாரியால் நிலத்தடி நீர் மற்றும் காற்று மாசு ஏற்படும். கல்குவாரியில் வெடி வைப்பதால் அருகில் உள்ள வீடுகள் விரிசல் ஏற்படும். கல்குவாரி வாகனங்களால் கிராம சாலை குண்டும், குழியுமாக ஏற்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Aug 2022 11:27 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!