/* */

சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணம் திருட்டு

செய்யாறு அருகே, சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

HIGHLIGHTS

சமையல் மாஸ்டர் வீட்டில் ரூ 10 லட்சம் நகை, பணம் திருட்டு
X

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா, கூழமந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45), சமையல் மாஸ்டர். இவரது மனைவி அஞ்சலை. இவர்களுக்கு சுவேதா என்ற மகளும், சதீஷ்குமார் என்ற மகனும் உள்ளனர். நேற்று ரமேஷ் வெளியில் சென்றுள்ளார். மகன், மகள் இருவரும் செய்யாறு சிப்காட் காலனி தொழிற்சாலையில் வேலைக்கு சென்றுள்ளனர்.

மாலை நேரத்தில், அஞ்சலையும் பக்கத்து தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து தனது வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீட்டின் வெளிப்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவும் திறந்து கிடந்தது.

அதில் வைத்திருந்த 26 பவுன் நகை, ரூ.1¼ லட்சம் ரொக்கம் திருட்டு போனது தெரியவந்தது. நகை, பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்கள், வீட்டின் தோட்டத்து பக்கமாக சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளைபோன நகை-பணத்தின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து தூசி போலீசில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில், சப்-இன்ஸ்பெக்டர் சிலம்பரசன் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

Updated On: 22 Nov 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  2. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  3. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  4. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  5. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  7. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  8. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  9. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  10. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது