செய்யாறு அருகே கஞ்சா வைத்திருந்த நான்கு பேர் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் பிரம்மதேசம் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் வந்த இரு இளைஞர்களின் பாக்கெட்டுகளில் கஞ்சா பொட்டலங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். இருவரையும் விசாரித்ததில் அவர்கள் பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த கோகுல் மற்றும் ஆற்காடை சேர்ந்த வசந்தகுமார் என்பது தெரியவந்தது.
அவர்கள் அளித்த தகவலின்பேரில் பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த மேலும் இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்தனர். இந்த நான்கு பேரிடம் இருந்து மொத்தம் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது . மேலும் இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது.
கைதான 4 பேரையும் போலீசார் செய்யாறு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu