/* */

திருவண்ணாமலை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் தூசி அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே கோவில் பூட்டை உடைத்து அம்மன் தாலி திருட்டு
X

அம்மன் தாலி திருட்டு போன மாரியம்மன் கோவில்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே பல்லாவரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. ஆடி மாதத்தையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.

இன்று காலை நடைதிறப்பதற்காக ஆறுமுகம் பூசாரி கோவிலுக்கு சென்றார். அப்போது கோவிலில் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து கிராம நாட்டாமை ஏழுமலை தூசி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அப்போது அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 4 கிராம் தாலி திருட்டு போனது தெரிய வந்தது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Updated On: 24 July 2022 1:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது