/* */

திருவண்ணாமலை மாவட்ட தேர்தலில் 3 தம்பதியினர் வெற்றி

திருவண்ணாமலை மாவட்டத்தில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட மூன்று தம்பதியினர் வெற்றி பெற்று உள்ளனர்

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்ட தேர்தலில் 3 தம்பதியினர் வெற்றி
X

வெற்றி பெற்றவர்கள். 

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிட்ட திமுக மற்றும் பாமக சார்பில் போட்டியிட்டு 3 தம்பதிகள் வெற்றி பெற்றுள்ளனர். திருவத்திபுரம் (செய்யாறு) நகராட்சியில் திமுக சார்பில் 18-வது வார்டில் மோகனவேல் மற்றும் 13-வது வார்டில் அவரது மனைவி பேபி ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.

இதேபோல் பாமக சார்பில் 12-வது வார்டில் சீனுவாசன், 20-வது வார்டில் அவரது மனைவி பத்மபிரியா ஆகியோர் . வெற்றி பெற்றுள்ளனர். சேத்துப்பட்டு பேரூராட்சியில் திமுக சார்பில் 6-வது வார்டில் நகர செயலாளர் முருகன் மற்றும் 3-வது வார்டில் அவரது மனைவி சுதா ஆகியோர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.

வெற்றி பெற்றுள்ள மூன்று தம்பதியினருக்கும், அனைத்து தரப்பு மக்களும் மற்றும் அரசியல் கட்சியினரும் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Updated On: 23 Feb 2022 12:45 AM GMT

Related News