/* */

திருவண்ணாமலை: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை

திருவண்ணாமலை அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணிற்கு 108 ஆம்புலன்சில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

HIGHLIGHTS

திருவண்ணாமலை: 108 ஆம்புலன்சில் பிறந்த பெண் குழந்தை
X

108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது.

தண்டராம்பட்டு தாலுகா நெடுங்காவாடி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி சத்யா (வயது 23). நிறைமாத கர்ப்பிணியான சத்யா பிரசவத்திற்காக தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தார். நேற்று மாலை அங்கிருந்து பிரசவத்திற்காக அவர் 108 ஆம்புலன்சு மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆம்புலன்சை டிரைவர் குமார் ஓட்டிச்சென்றார். மருத்துவ உதவியாளராக முனியப்பன் இருந்தார்.

ஆம்புலன்சில் செல்லும் போது சத்யா பிரசவ வலியால் துடித்தார். ராதாபுரம் அருகே சென்றபோது சத்யாவிற்கு பிரசவ வலி அதிகரித்தது. இதனால் வேறுவழியின்றி சத்யாவிற்கு மருத்துவ உதவியாளரே பிரசவம் பார்த்தார். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்பு தாயும், குழந்தையும் தண்டராம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

குழந்தை எடை குறைவாக இருந்ததால் தாயும், சேயும் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

Updated On: 28 May 2022 12:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...