/* */

வங்கி அதிகாரி பேசுவதாக கூறி கூலி தொழிலாளியிடம் நூதன முறையில் மோசடி

திருவண்ணாமலையில் வங்கி அதிகாரி பேசுவதாக கூறி கூலி தொழிலாளியிடம் நூதன முறையில் ரூ.1.50 லட்சம் மோசடி நடந்தது.

HIGHLIGHTS

வங்கி அதிகாரி பேசுவதாக கூறி    கூலி தொழிலாளியிடம் நூதன முறையில் மோசடி
X

செங்கம் தாலுகா கல்லரைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ், கூலி தொழிலாளி.இவர் இன்று திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நான் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சேமிப்பு கணக்கு வைத்து உள்ளேன். கடந்த 23-ந் தேதி மாலை எனது செல்போனுக்கு வங்கியில் இருந்த அதிகாரி பேசுவதாக கூறி ஏ.டி.எம். கார்டு தேதி முடிவடையும் நிலையில் உள்ளது.

புதிதாக கார்டு பெற வேண்டும். அதற்கு உங்கள் ஏ.டி.எம். கார்டின் பின்புறம் உள்ள குறியீடு எண்ணை கொடுங்கள் என கேட்டார். நானும் அந்த எண்ணை அவருக்கு கொடுத்தேன். அதன்பிறகு செல்போனுக்கு தகவல் வரும். அந்த எண்ணை கூறுமாறு சொன்னார். அவர் கூறியவாறே அந்த எண்ணை அவரிடம் கூறினேன். அப்போது எனது வங்கிக்கணக்கில் ரூ.1 லட்சத்து 57 ஆயிரம் தொகை இருப்பு இருந்தது.

நடமாடும் ஏ.டி.எம். வங்கி அலுவலரிடம் பணம் எடுக்க முயன்றபோது வங்கிக்கணக்கில் பணம் இல்லை என்றார். இதுகுறித்து இன்று தேவனாம்பட்டில் உள்ள வங்கிக்கு சென்று கூறியபோது, எனது வங்கிக்கணக்கு ஸ்டேட்மெண்டடை என்னிடம் கொடுத்து போலீசில் புகார் அளிக்க கிளை மேலாளர் கூறினார். எனவே புகார் மனுவினை பரிசீலித்து எழுத படிக்க தெரியாத என்னை ஏமாற்றி நூதன முறையில் பணத்தை எடுத்த நபர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 5 July 2022 1:54 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஜாமீன் முடிந்து டெல்லி முதல்வர் திகார் சிறையில் சரண்..!
  2. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கொடிக்கம்பம் அமைப்பதில் திமுக - பாமக மோதல்..!
  3. உசிலம்பட்டி
    உசிலம்பட்டி அருகே சாலையில் பட்டாசு வெடித்து 8 பேர் படுகாயம்..!
  4. தொழில்நுட்பம்
    பூமியின் எடை எவ்வளவு தெரியுமா..? தெரிஞ்சுக்கங்க..!
  5. போளூர்
    சேத்துப்பட்டு மார்க்கெட் கமிட்டியில் மத்திய, மாநில அதிகாரிகள்...
  6. வணிகம்
    ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் பட்டத்தை மீண்டும் அதானி தட்டினார்..!
  7. காஞ்சிபுரம்
    சிறு கோயில்களையும் சிறப்பாக பராமரிக்க வேண்டும் - ஸ்ரீ விஜயேந்திரர்...
  8. காஞ்சிபுரம்
    சாலவாக்கத்தில் 101 கேக்குகள் வெட்டி கலைஞர் பிறந்தநாள்
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு எண்ணிக்கை பணிகள் தீவிரம்
  10. சோழவந்தான்
    சோழவந்தான் கோயிலில் அர்ச்சகராக பணியாற்றியவருக்கு, பணி நிறைவு விழா..!