/* */

கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை

ஆரணியில் நடந்த கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு தலா 5 ஆண்டு சிறை தண்டனை வழங்கி ஆரணி கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது

HIGHLIGHTS

கொலை முயற்சி வழக்கில் 2 பேருக்கு 5 ஆண்டு சிறை
X

கொலைமுயற்சி வழக்கில் தண்டனை பெற்றவர்கள்

ஆரணி பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்தவர் யோகானந்தம் (வயது 33), இவரின் தம்பி சண்முகம். இருவரும் கடந்த 17.8.2016-ந்தேதி ஆரணி பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு டீக்கடை எதிரே சென்றபோது, அந்த வழியாக வந்த பாண்டியன், ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார் ஆகியோர் சேர்ந்து, யோகானந்தத்தை கத்தியால் கொலைவெறி தாக்குதல் நடத்தினர்.

அதில் படுகாயம் அடைந்த யோகானந்தம் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதுகுறித்து ஆரணி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி ஜி.ஜெயவேல், யோகானந்தம் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய பாண்டியன், ரஞ்சித் என்ற ரஞ்சித்குமார் ஆகியோருக்கு இந்திய தண்டனை சட்டம் 294 பிரிவின்படி 3 மாத சிறை தண்டனையும், 324 பிரிவின்படி ஒரு வருட சிறை தண்டனையும், 307 பிரிவின் படி தலா 5 வருட கடுங்காவல் சிறை தண்டனையும் தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையடுத்து பாண்டியன், ரஞ்சித்குமாரை ஆரணி டவுன் போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Updated On: 11 Nov 2021 10:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க