/* */

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன் தூக்கிட்டு தற்கொலை

திருத்தணி அருகே மனைவி இருந்த துக்கம் தாங்காமல் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

HIGHLIGHTS

மனைவி இறந்த துக்கம் தாங்க முடியாமல் கணவன்  தூக்கிட்டு தற்கொலை
X

உயிரிழந்த  துளசி மற்றும் மேகநாதன் தம்பதி

திருத்தணி அருகே மனைவி இருந்த துக்கம் தாங்க முடியாமல் கணவனும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொம்மராஜு பேட்டை கிராமத்தில் வசித்து வந்தவர் மேகநாதன் (58). விவசாயி இவரது மனைவி துளசி(50) .இந்தத் தம்பதிகளுக்கு 3.மகள் 1.மகன் உள்ளன மூன்று மகள்களுக்கு திருமணமாகி வெவ்வேறு பகுதியில் வசித்து வருகின்றனர். விவசாயி மேகநாதன் தனக்கு சொந்தமான நிலத்தில் கரும்பு, மற்றும் ரோஜா, சாமந்தி உள்ளிட்ட பூக்கள் பயிரிட்டு வந்தார்.

இந்த நிலையில் வயலில் இரவு நேரங்களில் பன்றிகள் வயலுக்குள் சென்று கரும்பு, பூச்செடிகளை சேதப்படுத்தியதாகவும் இதனை தடுக்கும் வகையில் விவசாயி மேகநாதன் தன் வயலுக்குள் சுற்றி மின் வேலி கம்பியை அமைத்திருந்தார். காலையில் துளசி பூக்களை அறுவடை செய்வதற்கு சென்றபோது எதிர்பாராத விதமாக துளசி மின் வேலியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

பூக்கள் அறுவடை செய்வதற்கு வயலுக்குச் சென்ற தன் மனைவி துளசி நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வராததால். மேகநாதனும் வயலுக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு மின் வேளியில் சிக்கி தன் மனைவி துளசி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து. துக்கம் தாங்க முடியாமல் மேகநாதனும் வயலில் உள்ள ஒரு மரத்திற்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர். அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துளசி மற்றும் மேகநாதன் ஆகியோரின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மனைவி இறந்த துக்கத்தில் அவரை பிரிந்து வாழ முடியாமல் தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Updated On: 8 April 2023 4:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...