/* */

திருத்தணி:மதுக்கடைகளில் கூட்டம் கூட்டமாக குவிந்த மது பிரியர்கள்..!

தொற்று பரவும் அபாயத்தை கண்டுகொள்ளாமல் மதுபாட்டில்களை வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

திருத்தணி:மதுக்கடைகளில்  கூட்டம் கூட்டமாக  குவிந்த மது பிரியர்கள்..!
X

திருத்தணி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு கூட்டம் கூட்டமாக மதுக் கடைகளில் குவிந்த மது பிரியர்கள்; தொற்று பரவும் அபாயத்தை கண்டுகொள்ளாமல் மதுபாட்டில்களை வாங்கி குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு வருகின்ற 10.5.2021 திங்கட்கிழமை அதிகாலை 4 மணி முதல் வருகிற 24ம் தேதி காலை 4 மணிவரை முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அரசு அறிவித்த ஊரடங்கின் போது அரசு டாஸ்மார்க் கடைகளும் மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஞாயிற்றுக்கிழமையான நாளை கடை இருக்குமோ என இருக்காதோ என, இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது. கொரோனா பாதிப்பில் இருந்து மீள்வற்காக அரசு விதித்த கட்டுப்பாடுகளான முக கவசம் அணிவது, சமூக விலகலை கடைப்பிடிப்பது போன்ற எந்த விதிமுறைகளையும் கடைப்பிடிக்காமல் முற்றிலும் காற்றில் பறக்கவிட்டு மதுபாட்டில்களை அதிக அளவில் வாங்கி சென்றதால் தொற்று அதிக அளவில் ஏற்பட வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

Updated On: 8 May 2021 3:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு