விடுதி காவலர் மர்ம மரணம்: போலீஸார் விசாரணை

விடுதி காவலர்  மர்ம மரணம்: போலீஸார் விசாரணை

திருத்தணி அருகே அரசு விடுதி காவலர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை

திருத்தணியில் ஆதிதிராவிடர் ஆண்கள் விடுதி இரவு காவல மர்மமான முறையில் உயிரிழந்தார்

திருத்தணி அருகே அரசு விடுதி காவலர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கே.ஜி.கண்டிகையில் அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் விடுதி உள்ளது‌. இந்த விடுதியில் சுற்றுவட்டார பகுதிகளை சார்ந்த சுமார் 55 மாணவர்கள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.

விடுதி இரவு காப்பாளராக வங்கனூர் கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் (45). என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று இரவு சமையலர் கோபிநாத், இரவு காவலர் தியாகராஜன் மற்றும் ஐந்து மாணவர்கள் விடுதியில் தங்கியுள்ளனர். இந்நிலையில் காலை இரவு காவலர் தியாகராஜன் விடுதியின் வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதனைக் கண்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக திருத்தணி போலீசார் தகவல் தெரிவித்தனர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து முன் விரோத காரணமாக யாராவது அடித்துக் கொண்டாரா அல்லது உடல்நிலை சரியில்லாமல் இறந்து கிடந்தாரா என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story