/* */

திருத்தணியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

காட்டன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தி நோட்டுகள் மற்றும் ரூ.17, ஆயிரத்தை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர்

HIGHLIGHTS

திருத்தணியில் காட்டன் சூதாட்டத்தில்  ஈடுபட்டவர்  கைது
X

தனிப்படை போலீஸாரால் கைது செய்யப்பட்ட திருத்தணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (25) 

திருத்தணியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் ஆன்லைன் சூதாட்டம், காட்டன் சூதாட்டம் நடப்பதாக திருத்தணி காவல் துணை கண்காணிப்பாளர் விக்னேஷ்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் தனிப்படைகள் அமைத்து சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து பிடிக்க உத்தரவிட்டிருந்தார்.

இதனை அடுத்து தனிப்படை போலீசார் திருத்தணி சுற்று வட்டாரப் பகுதிகளில் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் திருத்தணி நகரப்பகுதியில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்ட திருத்தணி அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் (25) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் அவரிடமிருந்து காட்டன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தி நோட்டுக்கள் மற்றும் ரூ.17, ஆயிரம் பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். இது குறித்து பொதுமக்கள் தெரிவிக்கையில், இந்த காட்டன் சூதாட்டம் என்பது ஏழை கூலி தொழிலாளர்களை குறி வைத்து அவர்கள் சம்பாதிக்கும் குறைந்த பணம் காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் பலஆயிரம் ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி அவர்களை உழைப்பை சுரண்டும் இதுபோன்று கும்பல்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


Updated On: 21 Jun 2023 2:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...