/* */

திருவள்ளூரில் பசுமை வீட்டிற்கு லஞ்சம்: ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்

பசுமை வீட்டின் திட்டத்தின் கீழ் இருளர் இன பெண் பயனாளியிடம், லஞ்சம் பெற்ற ஊராட்சி செயலாளரை, திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பணி இடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் பசுமை வீட்டிற்கு லஞ்சம்:  ஊராட்சி செயலர் பணி இடைநீக்கம்
X

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சூரியநகரம் ஊராட்சி பொம்பராஜபுரம் இருளர் காலனியைச் சேர்ந்த மாசிலா. பசுமை வீடு திட்டத்தின் கீழ், அவரது வங்கி கணக்கில் ரூ. 74 ஆயிரம் செலுத்தப்பட்டது. ஊராட்சி செயலாளர் ஜெயப்பிரகாஷ் என்பவர், மேற்கண்ட பயனாளியை வங்கிக்கு அழைத்துச்சென்று ரூ. 74 ஆயிரம் பெற்று அவரிடம் ரூ. 44 ஆயிரம் வழங்கி வீட்டிற்கு அனுப்பி விட்டார்.

நடந்த சம்பவம் பற்றி மாசிலா, அவரது மகனிடம் தெரிவித்துள்ளார். ரூ.30 ஆயிரம் குறைவாக இருப்பது குறித்து ஊராட்சி செயலரை கைபேசியில் தொடர்பு கொண்டு மாசிலிவின் மகன் குமார் கேட்டதற்கு 44 ஆயிரம் உங்கள் அம்மாவிடம் கொடுத்து விட்டேன். ரூ.30ஆயிரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் தரவேண்டும் என்றார். இது குறித்த உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது‌. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு ஊராட்சி செயலாளர் ஜெயப்பிரகாஷ் தற்காலிக பணி இடை நீக்கம் செய்து, கலெக்டர் ஆல்பீ ஜான் வர்கீஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

Updated On: 30 Dec 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆழ்ந்த சுவாசம் என்பது... உங்களை நீங்களே உணரும் அற்புத சக்தி!
  2. ஆன்மீகம்
    வரும் 18ம் தேதி திருப்பதி ஏழுமலையான் தரிசனம்; அதிர்ஷ்ட வாய்ப்பை மிஸ்...
  3. லைஃப்ஸ்டைல்
    முகம் பளிச்சுன்னு அழகா இருக்கணுமா? தயிரை முகத்துக்கு பயன்படுத்துங்க!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியம் வேணுமா? இஞ்சி பூண்டு விழுதுடன் தேன் கலந்து சாப்பிடுங்க...!
  5. லைஃப்ஸ்டைல்
    அறுசுவையான மாப்பிள்ளை சம்பா சாம்பார் சாதம் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    சமையலை ருசியாக மாற்ற சில முக்கிய விஷயங்களை தெரிஞ்சுக்கலாமா?
  7. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  8. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  9. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  10. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மனநல ஆலோசனை முகாம்