Begin typing your search above and press return to search.
கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா? எனக்கூறி தாக்கிய இருவர் கைது
திருவள்ளூர் மாவட்டம் கேசவராஜ் குப்பம் கிராமத்தில் திமுகவுக்கு ஓட்டுப் போட்டியா எனக்கூறி தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்..
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கேசவராஜ் குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் சம்பத் (36). இவரிடம் நேற்று முன்தினம் அதே பகுதியை சேர்ந்த கண்ணன் மற்றும் சம்பத் ஆகிய 2 பேரும் திமுகவுக்கு ஓட்டு போட்டியா? என கேட்டவாறு தகாத வார்த்தைகளால் பேசி, கை மற்றும் கால்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். எனவே இது குறித்து சம்பத் பொதட்டூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர்.