/* */

திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேகம் சேவை கட்டணம் உயர்த்த முடிவு

திருத்தணி முருகன் கோயிலில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேகம் சேவை கட்டணம் உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

HIGHLIGHTS

திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேகம் சேவை கட்டணம் உயர்த்த முடிவு
X

திருத்தணி முருகன்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி முருகன் கோயிலில் 9 ஆண்டுகளுக்கு பிறகு அபிஷேகம் சேவை கட்டணம் உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

முருகப்பெருமானின் ஐந்தாம் ப்டை வீடாக போற்றப்படும் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு பல்வேறு பகுதிகளிலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை வழப்பட்டு செல்கின்றனர்.

பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மூலவருக்கு பஞ்சாமிருதம், சந்தனகாப்பு, தங்க, வெள்ளி கிரீடம் அணிவித்தல், உற்சவர் திருக்கல்யாணம், வெள்ளி மயில் வாகனம், தங்கத்தேர் உட்பட பல்வேறு சேவைகளுக்கு அதற்கான கட்டணம் செலுத்தி பக்தர்கள் பங்கேற்று வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.

இச் சேவைகளில் கட்டண மாற்றமின்றி 9 ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றது. இந் நியையில், அபிஷேக பூஜைக்கு பயன்ப்படுத்தப்படும் மூலப்பொருட்கள் விலை கடுமையாக உயர்து திருக்கோயிலுக்கு கூடுதல் பாரம் ஏற்படுவதால், அபிஷேக சேவை கட்டணத்தை உயர்த்த திருக்கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக பக்தர்களிடம் கருத்து தெரிவ்க்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வரும் 25ம் தேதி வரை பொதுமக்கள் அபிஷேகம் சேவை கட்டணம் உயர்வு தொடர்பாக ஆலோசனைகள், ஆட்சேபனை தொடர்பாக திருக்கோயில் பிரதான அலுவலகத்தில் கடிதம் மூலமாகவோ அல்லது நேரடியாக வழங்கலாம் என்றும் www.tiruttanimurugan@gmail.com என்ற இணையதளம் வாயிலாக தெரிவிக்கலாம் என்று திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 18 Sep 2022 3:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  2. கோவை மாநகர்
    பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக கோவையில் என்.ஐ.ஏ. சோதனை
  3. தென்காசி
    தென்காசி மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. பொன்னேரி
    தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 2.வயது சிறுமி உயிரிழப்பு
  5. ஆன்மீகம்
    புத்த பூர்ணிமா எப்படி கொண்டாடுகிறோம்..?
  6. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகையும் மற்ற மாநிலங்களில் கொண்டாடும் விதமும்
  7. ஆன்மீகம்
    தமிழக கோயில்களில் யாழிக்கு தனி இடம் ஒதுக்க காரணம் என்ன?
  8. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே கல்லறை தோட்டத்தில் சடலம் புதைக்க மக்கள் எதிர்ப்பு
  9. திருத்தணி
    காட்டுப்பன்றிகளுக்கு வைத்த மின்வேலியில் சிக்கி இளைஞர்கள் உயிரிழப்பு
  10. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்