/* */

திருத்தணி பிரதான சாலையில் தாறுமாறாக ஓடிய பேருந்து : பயணிகள் பீதி

திருத்தணி சாலையில் ஓட்டுனருக்கு திடீர் வலிப்பு நோய் ஏற்பட்டதால் பஸ் கட்டுப்பாட்டை இழந்து ஓடியது. பேருந்தை சாதுரியமாக டிரைவர் நிறுத்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

திருத்தணி பிரதான சாலையில்  தாறுமாறாக ஓடிய பேருந்து : பயணிகள் பீதி
X

திருத்தணியில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய பஸ்  மினி லாரி மீது மோதி நின்றது

திருப்பதியிலிருந்து சென்னை கோயம்பேடுக்கு தடம் எண். 201 குளிர்சாதன வசதி பேருந்து நேற்று காலை சென்றுக் கொண்டிருந்தது. திருத்தணி சென்னை பைபாஸ் சாலை சந்திப்பு பகுதியில் கொன்ற போது பேருந்து ஓட்டுநர் ஹேமநாதனுக்கு திடீர் வலிப்பு ஏற்பட்டுள்ளது. பேருந்து கட்டுப்பாடு இழந்து சாலையில் தாறுமாறாக ஓடியதால் பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்ட பயணிகள் பீதியடைந்தனர்.

பிரதான சாலைக்கு அருகில் உயர் அழுத்த மின் கம்பம் மற்றும் பரப்பரப்பாக இயங்கும் சாலையில் தாறுமாறாக பேருந்து ஓடியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். கடும் வலியிலும் பொருட்படுத்தாமல் சாதுர்யமாக செயல்பட்டு சாலையோரம் நின்றிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதி பேருந்தை நிறுத்தினார்.

இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஓட்டுனரை காப்பாற்றி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச் சம்பவ குறித்து போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 18 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் தி மாடர்ன் அகாடமி பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் மாநில சாதனை
  2. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  3. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  4. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  6. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  7. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  8. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  9. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  10. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!