உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவியேற்பு; பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய எம் எல் ஏ.

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பதவியேற்பு; பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கிய எம் எல் ஏ.

கருணாநிதியின் சிலைக்கு மாலை அணிவித்த திருவள்ளூர் எம்எல்ஏ வி ஜி.ராஜேந்திரன். 

உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்றதை முன்னிட்டு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி திருவள்ளூர் எம்எல்ஏ வி ஜி.ராஜேந்திரன் உள்ளிட்ட திமுகவினர் கொண்டாடினர்.

துணை முதல்வராக உதயநிதி பதவி ஏற்றதை தொடர்ந்து திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் திருவள்ளூர் எம்எல்ஏ மற்றும் நகர்மன்ற தலைவர் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சர் ஆக பொறுப்பேற்றுக் கொண்டார். அதனை தமிழக முழுவதும் உள்ள திமுகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


அதன்படி திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி. ஜி. ராஜேந்திரன் மற்றும் நகர் மன்ற தலைவர் உதயமலர் பாண்டியன் ஆகியோர் ஏற்பாட்டில் திருவள்ளூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா, கருணாநிதி திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்ட பின்பு பொது மக்களுக்கு, மற்றும் வாகனங்களில் செல்பவர்கள், என அனைத்து தரப்பு மக்களுக்கும் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றதை கொண்டாடும் வகையில் இனிப்புகளை வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

இதில் திருவள்ளூர் நகர மன்ற துணைத் தலைவர் சி.சு. ரவிச்சந்திரன், நகர்மன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் ஜான், பிரபாகரன், அயூப்அலி, செல்வகுமரன், தாமஸ் (எ) ராஜ்குமார், வசந்தி வேலாயுதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story