திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 76 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்தனர்
X
By - Saikiran, Reporter |14 Aug 2021 7:43 PM IST
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் 76 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.
திருவள்ளூரில் நேற்று ஒரே நாளில் 75 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 76 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
மாவட்டத்தில் நேற்று இருவர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் நேற்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 937 ஆக உள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,14,614 ஆகவும், இதில் 1,11,908 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1769 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu