/* */

திருவள்ளூரில் நடமாடும் காய்கறி வாகனங்கள்: அமைச்சர் துவக்கி வைத்தார்!

திருவள்ளூர் நகராட்சியில் நடமாடும் காய்கறி வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் நடமாடும் காய்கறி வாகனங்கள்: அமைச்சர் துவக்கி வைத்தார்!
X

காய்கறி வாகன சேவையை அமைச்சர் சா.மு.நாசர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோயின் காரணமாக தமிழக அரசு இன்று முதல் மே 31ம் தேதி வரை தளர்வுகளற்ற ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆகவே பொது மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அறிந்து பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான காய்கறி ஆகிய முக்கிய பொருட்கள் தடையின்றி கிடைப்பதற்கு, தமிழக அரசு சார்பில் அந்தந்த மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் நடமாடும் காய்கறி கடைகளை அமைத்து அதன் மூலம் பொது மக்களின் வீடுகள் தேடி காய்கறி விற்பனை நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக இன்று திருவள்ளுவர் நகராட்சி அருகே நடமாடும் காய்கறி வாகனங்களை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு. நாசர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பொன்னையா மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 24 May 2021 5:32 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. தமிழ்நாடு
    வேளாண் துறையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை 7 ஆயிரமாக உயர்வு
  3. அண்ணா நகர்
    சென்னை ஐஐடி யில் மேஸ்ட்ரோ இளையராஜா இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம்
  4. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  5. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  6. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  8. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  9. லைஃப்ஸ்டைல்
    அன்பான கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்
  10. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!