/* */

திருவள்ளூர் எஸ்.வி.ஜி.புரத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படும்- எம்எல்ஏ சந்திரன்

திருவள்ளூர் எஸ்.வி.ஜி. புரத்தில் அடிப்படை வசதிகளை அமைத்துத் தர திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ். சந்திரனிடம் கிராம மக்கள், கோரிக்கை வைத்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் எஸ்.வி.ஜி.புரத்தில் அடிப்படை வசதி ஏற்படுத்தப்படும்- எம்எல்ஏ சந்திரன்
X

திருவள்ளூர் எஸ்.வி.ஜி புரத்தில் சந்திரன் எம்எல்ஏ ஆய்வு மேற்கொண்ட காட்சி.

திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட எஸ்.வி.ஜி புரத்தில் சட்டமன்றஉறுப்பினர் சந்திரன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கிராம மக்கள் தங்களுக்கென குடிநீர்ப் பிரச்சினை இருப்பதாகவும் மற்றும் நியாயவிலைக் கடைகள் குறித்த பிரச்சினையினை பெண்கள் மற்றும் ஆண்கள் என ஏராளமானோர் தங்களது கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினர் சந்திரனிடம் முன் வைத்தனர்.

தங்கள் கிராமத்தில் குடிநீர் வசதி இல்லை என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள போரின் தண்ணீர் வரவில்லை எனவும் நியாயவிலைக் கடைகள் வெகுதூரத்தில் அமைந்துள்ளதாகவும், தங்களுக்கென தனியாக நியாய விலைக்கடை அமைத்துத் தர வேண்டியும் சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கையாக வைத்தனர்.

இதனை கேட்டறிந்த சந்திரன் எம்எல்ஏ, கொரோனா பேரிடர் காலத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பேரிடரை கட்டுப்படுத்தும் பொருட்டு செயல்பட்டு வருவதாகவும், மிக விரைவில் தங்களுக்கான குறைகளை சரி செய்து தருவதாகவும் கிராம மக்களுக்கு வாக்குறுதி அளித்தார்.

Updated On: 8 Jun 2021 11:33 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மாதம்பட்டி ரங்கராஜன் ஸ்டைல் மா இஞ்சி தொக்கு செய்வது எப்படி?
  2. இந்தியா
    மும்பை அருகே குடிபோதையில் பெண்கள் அமளி!
  3. லைஃப்ஸ்டைல்
    காற்றுக்காதலனின் அணைப்பால், மேக காதலியின் ஆனந்தக்கண்ணீர், மழை..!
  4. நாமக்கல்
    10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நாமக்கல் குறிஞ்சி பள்ளி மாணவர்கள் சாதனை
  5. பொள்ளாச்சி
    பொள்ளாச்சியில் 8.400 கிலோ கஞ்சா பறிமுதல் ; தந்தை, மகன் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  7. மேட்டுப்பாளையம்
    கல்லாறு சோதனை சாவடியில் தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, இ-பாஸ் ஆய்வு..!
  8. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டம் 10ம் வகுப்பில் 95.08 சதவீதம் தேர்ச்சி: மாநில அளவில்...
  10. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு