/* */

தனது வாக்கினை பதிவு செய்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்

திருவள்ளூரில் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

HIGHLIGHTS

தனது வாக்கினை பதிவு செய்தார் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர்
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தனது வாக்கினை பதிவு செய்த காட்சி.

தமிழகம் முழுவதும் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதி என 40 தொகுதிகளிலும் இன்று நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

திருவள்ளூர் (தனி)தொகுதியில் நாடாளுமன்ற தொகுதியில் இன்று காலை ௭ மணிக்கு தேர்தல் தொடங்கியது . திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமி மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மாதவரம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுயில் 10 லட்சத்து ,24 ஆயிரத்து 149 ஆண் வாக்காளர்களும், 10 லட்சத்து,61 ஆயிரத்து 457 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 385 பேர் உள்பட மொத்தம் 20 லட்சத்து 85 ஆயிரத்து 991 வாக்காளர்கள் உள்ளனர்.

மொத்தமாக திருவள்ளூர் (தனி) நாடாளுமன்ற தொகுதியில் 2256 வாக்கு சாவடி மையங்கள் உள்ளன. எனவே தொகுதிக்குட்பட்ட அனைத்து வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் இருப்பதால் விறுவிறுப்பாக வாக்கு பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவள்ளூர் தனி நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட லட்சுமி மேல்நிலை பள்ளியில் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அலுவலருமான பிரபுசங்கர் தனது வாக்கினை பதிவு செய்தார்.

Updated On: 18 April 2024 8:16 PM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மேலக்கால் கிராமத்தில் அடிக்கடி ஏற்படும் மின்தடையால் மக்கள் அவதி..!
  2. நாமக்கல்
    இப்படியும் ஒரு ஆச்சரியம்; ராசிபுரத்தில், பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண்...
  3. கோவை மாநகர்
    தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த கோவை மாவட்ட ஆட்சியர்
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வெயிட் லாஸ்... சூப்பர் ஈஸி டிப்ஸ்!
  5. லைஃப்ஸ்டைல்
    சிதறும் மனதைச் சீர் செய்யும் சில வழிகள்
  6. நாமக்கல்
    போலீசாரின் மிரட்டலுக்கு பயந்து செல்போன் டவரில் ஏறி இளைஞர் தற்கொலை...
  7. திருமங்கலம்
    அலங்காநல்லூர் அருகே பேச்சியம்மன் ஆலயத்தில் மண்டல பூஜை..!
  8. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே காவல் ஆய்வாளர் வீட்டில் நகை, பணம் கொள்ளை..!
  9. இந்தியா
    பெரியவர்களுக்கான சிறைகளில் குழந்தைகள்..! அதிர்ச்சி அறிக்கை..!
  10. இந்தியா
    மோக வலையில் ஏவுகணை ரகசியம்: பாகிஸ்தான் சூழ்ச்சி தோல்வி