/* */

திருவள்ளூர் அருகே வாட்டர் ஹீட்டரில் மின்கசிவு :மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

திருவள்ளூர் அருகே அதிகத்தூரில் வாட்டர் ஹீட்டரில் மின்கசிவு ஏற்பட்டதால் மின்சாரம் பாய்ந்து 7வயது சிறுவன் பலியானான்.

HIGHLIGHTS

திருவள்ளூர் அருகே வாட்டர் ஹீட்டரில் மின்கசிவு :மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி
X

மின்சாரம் பாய்ந்து பலியான சிறுவன் (பழைய படம்)

திருவள்ளூர் அடுத்த அதிகத்தூரில் குளியலறையில் உள்ள வாட்டர் ஹீட்டரில் கையை வைத்ததன் காரணமாக 7 வயது சிறுவன் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் விநாயகம். இவரது மனைவி நிஷாந்தினி. இவர்களது மகன் அவினாஷ் (7). நேற்று மாலை 5 மணி அளவில் வீட்டின் குளியலறையில் இருந்த வாட்டர் ஹீட்டரில் (தண்ணீர் கொதிகலனில்) மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை அறியாத சிறுவன் அவினாஷ் அந்த தண்ணீரில் கை வைத்த போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டு உள்ளான். உடனடியாக குழந்தையின் பெற்றோர் சிறுவனை திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை அவினாஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

வீட்டில் உள்ள குளியலறையில் நீர் கொதிகலனில் அதாவது வாட்டர் ஹீட்டரில் இருந்து வந்த நீரை தொட்டு அதனால் மின்சாரம் பாய்ந்து 7 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிகத்தூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 25 April 2021 8:47 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...