/* */

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 402 பேருக்கு கொரோனா: 20 பேர் உயிரிழப்பு!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 402 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்ததுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 402 பேருக்கு கொரோனா: 20 பேர் உயிரிழப்பு!
X

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகின்றது. இன்று ஒரே நாளில் 402 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 689 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று 20 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 2780 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,06,982 ஆகவும், இதில் 1,02,631 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1571 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Updated On: 11 Jun 2021 2:32 PM GMT

Related News