புழல் அருகே மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் பணம் கொள்ளை

புழல் அருகே மருந்து கடையில் பூட்டை உடைத்து ரூ.8 லட்சம் பணம் கொள்ளை
X
புழல் அருகே விநாயக புரத்தில் மருந்து கடையின் பூட்டை உடைத்து ₹.8 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது பற்றி போலீசார் விசாரணை நடத்தினர்.

புழல் அருகே மருந்து கடை பூட்டை உடைத்து ₹.8 லட்சம் திருட்டு போனது பற்றி போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையடித்த மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், மாதவரம் தொகுதி, புழல் அடுத்த விநாயக புரம் பகுதி கல்பாளைத்தை சேர்ந்தவர் சேர்ந்த செந்தில்குமார்( வயது 44), இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அவரது சகோதரர் கற்பக வேல் என்பவர் கடையை கவனித்து வந்தார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று காலை கடையை திறந்து வியாபாரம் முடித்து இரவு கடையை மூடிவிட்டு வழக்கம் போல் வீடு சென்றார்.

இன்று காலை கடையை திறக்க வந்த செந்தில்குமார் கடையின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த செந்தில்குமார் உள்ளே சென்று கல்லாப்பெட்டியில் பார்த்தபோது அதில் வைத்திருந்த ₹.8 லட்சம் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து புழல் காவல்துறைக்கு தகவல் அளித்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் கடையை பார்வையிட்டு கைரேகை நிபுணர்களை வர வைக்கப்பட்டு அங்கு பதிந்துள்ள கைரேகை பதிவு செய்து கொண்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி இது குறித்து வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். எப்பொழுதும் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படும் பகுதியில் இச்சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story
why is ai important to the future