திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
X
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவ மழை முன் எச்சரிக்கை தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி முருகேஷ் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் நாளை மறுதினம் திருவள்ளூர் மாவட்டத்திற்கு ரெட் ஆலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு கண்காணிப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரி முருகேஷ் தலைமையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய இடங்கள் அத்தகைய இடங்களில் தாழ்வான இடங்களில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களை தங்குவகிப்பது குறித்தும் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தீயணைப்பு துறையினர் மருத்துவர் துறையினர் கால்நடை துறையினர் வருவாய்த் துறையினர் என அனைத்து அனைத்து துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தது குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார்.
மேலும் மாவட்டத்தை பொறுத்தவரை அதிக ஏரி குளங்கள் ஆறுகள் நிறைந்த மாவட்டம் என்பதால் கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறு கண்காணிக்கும் அதிகாரிகள் நீர்வளத்துறை அதிகாரிகளுடன் பாதுகாப்பு தன்மை குறித்தும் கேட்டறிந்தார்கள்.
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Similar Posts
ஆவடி அருகே ஈச்சம் மரக்கன்று மற்றும் பனை விதைகள் விதைக்கும் நிகழ்ச்சி
திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை குறித்த ஆய்வு கூட்டம்
துணி அயர்ன் செய்த போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த பள்ளி மாணவன்
திருவள்ளூர் அருகே ஆம்புலன்ஸ் மீது இருசக்கர வாகனம் மோதி ஒருவர் உயிரிழப்பு
சாய்பாபா மகா சமாதி அடைந்த நாளை முன்னிட்டு சிறப்பு வழிபாடு
திருவள்ளூர் அருகே வழிப்பறி கொள்ளையர்கள் இருவர் கைது
கோவிலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் நகை பறிப்பு
இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும்  சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு
இலவச வீட்டுமனை பட்டாக்களை வழங்கிய  துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
கும்மிடிப்பூண்டி ரயில் நிலையம் அருகே கஞ்சா கடத்திய இரண்டு பேர் கைது
கமல் பிறந்தநாளில் தக் லைஃப் டிரைலர்! விரைவில் அறிவிப்பு..!
அடகு கடையில் போலி தங்க நகை வைத்து மோசடியில் ஈடுபட்ட 6 பேர்  கைது
கும்மிடிப்பூண்டி அருகே முட்புதரில் ரத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பெண் உடல்