/* */

கிருஷ்ணா கால்வாயில் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்

கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

HIGHLIGHTS

கிருஷ்ணா கால்வாயில்   தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட மாணவர்
X

கிருஷ்ணா கால்வாயில் குளிக்க சென்ற 12ம் வகுப்பு மாணவன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு விநாயகபுரத்தில் வசித்து வருபவர் முரளிதரன். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மகன் பிரனேஷ் அப்பகுதியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை தனது நண்பர் வேல் சரவணனுடன் பூண்டி நீர்த்தேக்கத்திலிருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் தொட்டிக்கலை என்கின்ற இடத்தில் குளிக்க சென்றுள்ளார். அப்போது கால் தவறி தண்ணீரில் விழுந்து நீரில் மூழ்கியுள்ளார். அவருடன் குளிக்கச் சென்ற அவரது நண்பர் வேல் சரவணன் கூச்சலிட்டுள்ளார். அவர் ஓடி வந்து காப்பாற்றுவதற்கு முன்பாகவே பிரனேஷ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார் . இதுகுறித்து, முரளிதரன் செவ்வாபேட்டை காவல் நிலைத்திருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தார். போலீசாரும் தீயணைப்பு படை வீரர்களும் விரைந்து வந்து, தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட மாணவரின் சடலத்தை தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை கிடைக்காததால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.

Updated On: 29 Aug 2021 3:28 PM GMT

Related News

Latest News

  1. உலகம்
    ஆப்கானில் ஏற்பட்டதிடீர் வெள்ளம்! இறந்தவர்களின் எண்ணிக்கை 300க்கும்...
  2. லைஃப்ஸ்டைல்
    அரிசியில் பூச்சிகள், வண்டுகள் வராமல் தடுப்பது எப்படி?
  3. வணிகம்
    பாம் ஆயிலில் இருந்து சூரியகாந்தி எண்ணெய்க்கு மாறும் லேஸ் சிப்ஸ்..!
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தை அள்ளித் தரும் கிவி ஜூஸ் - இனிமேல் மிஸ் பண்ணாதீங்க!
  5. ஆன்மீகம்
    பூஜை அறையை எப்போதும் சுகந்தமாக வைத்திருக்க என்ன செய்யலாம்?
  6. தேனி
    தேனியில் 4வது நாளாக மழை! வைகை அணையில் நீர் திறப்பு!
  7. இந்தியா
    இணையம் என்ன டாக்டரா..? விழிப்பு வேணும்..!
  8. குமாரபாளையம்
    இரண்டு மணி நேர மழையால் நிலவிய குளிர்ச்சி! வீடு சேதம்!
  9. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  10. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்