ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா

ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா

ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது.

பெரியபாளையம் அருகே கன்னிகாபுரம் ஊராட்சி வாணியஞ் சத்திரம் கிராமத்தில் ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலய தீமிதி திருவிழாவில் விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் தீ மிதித்து அம்மனை வழிபாடு நடத்தினர்.

பெரியபாளையம் அருகே கன்னிகாபுரம் ஊராட்சி வாணியஞ் சத்திரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ ஏகாத்தம்மன் ஆலயத்தில் தீமிதி திருவிழா நடைபெற்றது. காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் தீ மிதித்து நேர்த்தி கடனை செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், கன்னிகாபுரம் ஊராட்சி வாணியஞ் சத்திரம் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு ஏகாத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 16-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக கடந்த 6 ஆம் தேதி அன்று கணபதி ஹோமத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம், கங்கை நீர் திரட்டி பக்தர்கள் பால்குடம் எடுத்தல், ஏகாத்தம்மன்க்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து காப்பு கட்டுதல், அம்மனுக்கு கூழ்வார்த்தல், அன்று மாலை பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை, பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம், வலிழள் வழங்குதல் நடைபெற்றது.


இதனைத் தொடர்ந்து கங்கை அம்மனுக்கு கூழ்வார்த்தல் பொங்கல் வைத்து படையல் இடுதல், கரகம் ஏந்தி எல்லை சுற்றி வருதல், 13ம் தேதி அன்று பக்தர்களுக்கு காப்பு கட்டுதல் நாகாத்த அம்மனுக்கு பொங்கல் வைத்தல், 14.ஆம் தேதி அன்று அக்னி சட்டி ஏந்தி வீதி உலா வருதல் உறியடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நேற்று (16.ஆம் தேதி) காலை மாலை என இரண்டு வேலைகளில் பால், தயிர், சந்தனம், ஜவ்வாது, தேன், இளநீர், பன்னீர், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், திரு ஆபரணங்களாலும் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 280 விரதம் இருந்து காப்பு கட்டிய பக்தர்கள் கங்கை நீராடி உடல் முழுவதும் பூக்களாலும் சந்தனத்தாலும் அலங்காரம் செய்து தீ மிதிக்க காத்திருந்தனர்.

அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் ஏகாத்தம்மன் டிராக்டரில் வைத்து கங்கை நீராடிய பக்தர்களை கோவிலுக்கு அழைத்து வரும் நிகழ்ச்சியும் நடந்த பின்னர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் ஒருவருக்கு ஒருவர் பின் இறங்கி தீ மிதித்து தங்களின் நேர்த்தி கடனை செலுத்தி பின்னர் ஆலயத்தில் உள்ள மூலவரை தரிசனம் செய்தனர்.

இதன் பின்னர் விழாவை காண வந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு ஆலயத்தின் சார்பில் அன்னதான பிரசாதங்களும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்களும் விழா குழுவினரும் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

Read MoreRead Less
Next Story