Begin typing your search above and press return to search.
பெரியபாளையத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள்
பெரியபாளையத்தில் ஸ்ரீ சீனிவாச பெருமாள் மகாலட்சுமி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
HIGHLIGHTS
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் சுழம்பு எழுந்தருளி புகழ் பெற்ற பவானி அம்மன் உள்ளது. இக்கோவிலில் இன்று வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு அதிகாலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீனிவாச மகாலட்சுமி அம்மனுக்கு அதிகாலை மஞ்சள்,குங்குமம், பால் தயிர், இளநீர்,உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்ட பின்னர் வண்ண மலர்களால் ஆகாரம் செய்யப்பட்டு தீப ஆராதனைகள் நடைபெற்றது.
இதன் பின்னர் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு உற்சவர் மகாலட்சுமி அம்மனை கோவில் வளாகத்தில் உலா வரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர்.