/* */

கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள் பறிமுதல்

செங்குன்றத்தில் கனரக வாகனங்களை சோதனை செய்து அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை, முகப்பு விளக்குகளை அகற்றி அபராதம் விதிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஹாரன்கள்  பறிமுதல்
X

கனரக வாகனங்களில் காற்று ஒலிப்பான்களை அகற்றும் வட்டார போக்குவரத்து துறையினர்

செங்குன்றத்தில் கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள், முகப்பு விளக்குகள் பறிமுதல். 1.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. மீண்டும் ஏர் ஹாரன்கள் பொருத்தினால் உரிமம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது

திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் நல்லூர் சுங்கச்சாவடியில் தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டது. செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் தலைமையில் அதிகாரிகள் குழுவினர் கனரக வாகனங்களான தனியார் பேருந்துகள், லாரிகள், ஆம்னி பேருந்துகள், வேன்கள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் ஹாரன்கள் குறித்து ஆய்வு நடத்தினர்.

தடை செய்யப்பட்ட அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்கள் பொருத்தப்பட்ட வாகனங்களில் இருந்து ஏர் ஹாரன்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இந்த ஆய்வில் 15 வாகனங்களில் விதிகளை மீறி பொருத்தப்பட்ட அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் மற்றும் விதிகளுக்கு புறம்பாக கண்களை கூசும் வகையில் பொருத்தப்பட்ட அதிக ஒளி வீசும் 7 முகப்பு விளக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு 1.6 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மீண்டும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட ஏர் ஹாரன்கள் பொருத்தக்கூடாது எனவும், அதிகாரிகளின் தணிக்கையில் ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்ட வாகனங்களில் மீண்டும் ஏர் ஹாரன் பொருத்தியது கண்டறியப்பட்டால் வாகன உரிமம் ரத்து செய்யப்படும் என செங்குன்றம் வட்டார போக்குவரத்து அலுவலர் இளமுருகன் எச்சரித்தார்.

Updated On: 2 Nov 2023 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  3. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  4. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  5. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  6. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  7. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  8. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  9. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!
  10. திருப்பரங்குன்றம்
    கூடலழகர் பெருமாள் கோயில், வைகாசிப் பெருந் திருவிழா!