கோவில் சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து சாலை மறியல்

கோவில் சுற்றுச்சுவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்களை கண்டித்து  சாலை மறியல்

பொதுமக்கள் நடத்திய சாலை மறியல் போராட்டம்.

கோவிலுக்கு சுற்று சுவர் எழுப்ப எதிர்ப்பு தெரிவிக்கும் குடும்பத்தார் கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் அருகே கோவில் சுற்றுச்சுவர் அமைக்க கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளுர் மாவட்டம், மேல்நல்லாத்தூர் பகுதியில் சுமார் 20 ஆண்டுக்கும் மேலாக ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலை சுற்றிலும் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த இடத்தை சுற்றிலும் கோவில் சார்பில் சுற்று சுவர் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன,

இந்த நிலையில் ஸ்ரீ லட்சுமி நாராயண பெருமாள் கோயில் பின்புறம் வசிக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தன்னுடைய மனைவி மோகனாவுடன் சேர்ந்து தனது வீட்டு அருகே சுற்று சுவர் எழுப்பக் கூடாது. நாங்கள் 20 ஆண்டுகளுக்கு மேலாக அரசு புறம்போக்கு இடத்தில் வசிப்பதால் இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது எனவும் எங்கள் வீட்டு பகுதியில் இருந்து 20 அடி தள்ளி கோவில் சுற்றுச் சுவர் அமைத்துக் கொள்ளுங்கள் என கூறியதாக கிராம மக்கள் தெரிவித்தனர்.


இந்நிலையில் ஊருக்கு பொதுவாக உள்ள கோவில் சுற்றுச் சுவர் அமைப்பதற்கு இடையூறாக இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஆறுமுகம் மற்றும் அவரது மனைவி மோகனா ஆகியோரை கண்டித்து திருவள்ளூர் ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளர் சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அரசு புறம்போக்கு இடத்தை அளந்து கோவிலுக்கு சுற்று சுவர் எழுப்ப ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்தப் போராட்டத்தால் போக்குவரத்து கடும் பாதிக்கப்பட்டது.

Tags

Next Story