புழல் சிறையில் பொங்கல் விழா

புழல் சிறையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பல்வேறு போட்டிகளில் உற்சாகமாக கைதிகள் பங்கேற்பு. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார் சிறைத்துறை டிஜிபி மகேஸ்வரன் தயால்.
Puzhal Jail Pongal Celebration
திருவள்ளூர் மாவட்டம், சென்னை புழல் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை, பெண்கள் என 3 சிறைகளில் 200 பெண் கைதிகள் உள்பட சுமார் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட கைதிகள் உள்ளனர்
Puzhal Jail Pongal Celebration
. தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு பல்வேறு போட்டிகளுடன் பொங்கல் விழா நடைபெற்றது. கவிதை, கட்டுரை, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, பட்டிமன்றம் மட்டுமின்றி கிராமப்புற விளையாட்டு போட்டிகளான உறியடி, சிலம்பம், நடனம், கயிறு இழுத்தல், இசை நாற்காலி, சதுரங்க போட்டி உள்பட பல போட்டிகள் நடத்தப்பட்டு கைதிகளின் தனித்துவமான இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
Puzhal Jail Pongal Celebration
புழல் சிறையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் சிறைத்துறை டிஜிபி மகேஸ்வர் தயால் கலந்து கொண்டு பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற சிறை கைதிகளுக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து சிறை வளாகத்தில் மண்பானையில் பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டனர். சிறை கைதிகள் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் பண்டிகை காலங்களில் சிறைச்சாலையில் போட்டிகள் நடத்தப்பட்டு வருவதாக சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ல்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu